தேவதானப்பட்டி, மே 6: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (49). இவர் சில்வார்பட்டி கண்மாய் அருகே சாலையில் நடந்து செல்லும் போது அவ்வழியாக டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.