கிருஷ்ணகிரி, ஏப்.3:காவேரிப்பட்டணம் கோவிந்தப்பா முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், கோயில் பூசாரி. இவர் கடந்த ஜனவரி 25ம் தேதி வீட்டின் முன் தனது டூவீலரை நிறுத்தியிருந்தார். அந்த டூவீலரை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். சரவணன் டூவீலரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் போலீசில் சரவணன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் துணிகர திருட்டு
previous post