குமாரபாளையம்,செப்.2: மாரபாளையம் கிழக்கு சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜன்(27). புரோட்டா மாஸ்டரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் டூவீலரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலையில் விழித்துக்கொண்ட நாகராஜன், வெளியில் நிறுத்தி வைத்திருந்த டூ வீலர் பத்திரமாக இருக்கிறதா என எட்டி பார்த்துள்ளார். அப்போது, அங்கு டூவீலர் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். ஆனால், சற்று தொலைவில் தனது டூவீலரை ஒருவன் தள்ளிக்கொண்டு செல்வதை கண்டு சந்தேகித்து சத்தம் போட்டுள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று டூவீலரை தள்ளிக்கொண்டு சென்றவரை மடக்கி பிடித்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(38) என்பது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
டூவீலர் திருடியவர் சுற்றி வளைப்பு
previous post