கிருஷ்ணகிரி, மார்ச் 26: காரிமங்கலம் அருகே, வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (26). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு, மனைவி மனிலாவுடன் (23), ஓசூரில் இருந்து காரிமங்கலத்திற்கு டூவீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், அவதானப்பட்டி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி டூவீலர் மீது உரசியுள்ளது. இதில், மனிலா டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த டேம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி
previous post