கண்ணமங்கலம் அடுத்த குப்பம், ரெட்டிப்பாளையம் அருேக உள்ள மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் டிரோன் கேமராக உதவியுடன் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தினர். திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்படி கூடுதல் எஸ்பி சதீஷ்குமார், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவினர், குப்பம் தாண்டு மலை, ரெட்டிப்பாளையம் நாமக்கார மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.