நாகர்கோவில் : நாகர்கோவில் – திருநெல்வேலி இடையிலான என்ட் டூ என்ட் பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயங்குவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 4 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் ஆகும். இந்த பஸ்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இடை நில்லா பஸ்கள் என்பதால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் பணி நிமித்தமாக சென்று வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதனால் நாகர்கோவிலில் இருந்து காலை வேளையில் திருநெல்வேலிக்கு செல்லும் என்ட் டூ என்ட் பஸ்களில் இருக்கைகள் பிடிக்க பயணிகள் கூட்டம் அலைமோதும்.இதே போல் மாலை வேளையில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரும் என்ட் டூ என்ட் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஒவ்வொரு பஸ்சும் தலா 5 டிரிப் இயங்குகிறது. அதிகாலை 3.45க்கு முதல் டிரிப் நாகர்கோவிலில் இருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு பஸ்சும் தினமும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் வசூல் வந்தது. முகூர்த்த நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் வசூல் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல்கிணறு பகுதியில் மட்டும் தான் இந்த பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதியில் இருந்து இந்த என்ட் டூ என்ட் பஸ்கள், கண்டக்டர் இல்லாமல் இயங்கி வருகின்றன. வடசேரி பஸ் நிலையத்தில் 4 கண்டக்டர்களும், திருநெல்வேலி பஸ் நிலையத்தில் 4 கண்டக்டர்களும் பணியில் இருந்து, டிக்கெட் ெகாடுத்து பஸ்சை அனுப்பி வைக்கிறார்கள். பயணிகள் இருக்கைகள் நிரம்பினாலும் டிக்கெட் கொடுப்பதற்காக 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கண்டக்டர்கள் டிக்கெட் கொடுத்து சரிபார்த்த பின் பஸ் கிளம்புகிறது.இதனால் பயண நேரம் கூடுதல் ஆகிறது. இதன் காரணமாக காலை வேளையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு பணிக்கு செல்ல வேண்டியவர்கள் ெபரும் சிரமம் அடைகிறார்கள். இதே போல் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வர வேண்டியவர்களும் சரியான நேரத்துக்கு வர முடிவதில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.ஏற்கனவே கண்டக்டர் இல்லாமல் இயங்கி வசூல் குறைந்ததால் தான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவாக கண்டக்டர் இல்லாமல் என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்குவது பயணிகளை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக தற்போது சபாநாயகர், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து கழக இயக்குனர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து என்ட் டூ என்ட் பஸ்களை கண்டக்டர் கொண்டு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிகாரிகளுடன் வாக்குவாதம்நாகர்கோவிலில் இருந்து நேற்று காலை என்ட் டூ என்ட் பஸ்சில் பயணிகள் ஏறி இருக்கைகள் நிரம்பிய பின்னரும் கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்க வேண்டி இருந்ததால் பஸ் புறப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சிலர், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு தான் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படுகிறது. நீங்கள் மேலிட அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என கூறினர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இருக்கைகள் காலியாக இருந்தும் பயணிகள் ஏற வழியில்லைகண்டக்டர் இல்லாமல் என்ட் டூ என்ட் இயங்குவதால், சில சமயங்களில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட பயணிகள் ஏற வழியில்லை. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் போது காவல்கிணறு பகுதியில் அதிகம் பேர் இந்த பஸ்சில் ஏறுவார்கள். தற்போது பஸ்சில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் கண்டக்டர் இல்லாததால் பயணிகளை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகம் வருமானம் இல்லாத நிலை இருக்கிறது. மேலும் வருமானத்தை குறைக்க அதிகாரிகள் இது போன்ற சதி நடவடிக்கையை எடுப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்….