திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே கல்லணை பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள கல்லணை பிரிவு சாலை பகவதிபுரம் செல்லும் வழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்தவரின் சடலத்தை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்து கிடந்தவர் முழு கை வெள்ளை நிற சட்டையும். பச்சை கலர் கட்டம் போட்ட கைலியும் அணிந்துள்ளார். பச்சை கலரில் கட்டம் போட்ட துண்டு போட்டுள்ளார்.
ஞாயிறு தோறும் படியுங்கள் திருவெறும்பூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு
previous post