சென்னை: ஜெய் பீம் படத்துக்கு வன்னியர் சங்கம், பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது. இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூர்யா மீது நடவடிக்கை எடுக்ககோரியும் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனர். குறிப்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பாமகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். வன்னியர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது….