Thursday, May 16, 2024
Home » ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது

by Ranjith

 

ஜெயங்கொண்டம், ஏப்.6: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் கிராமம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகன் பாலமுருகன் (28) கூலி தொழிலாளி. இவர் அருகே உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களுக்கு முன்பு பெண்ணின் தாயார் உதவியுடன் காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும். இது குறித்து புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக பாலமுருகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் இருவர் மீதும் வழக்கு பதிந்து பாலமுருகனை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi