மதுரை, மார்ச் 16: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி, மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி கடந்த 2017ல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தீவிர போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் 64 பேர் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கின் விசாரணை மதுரை 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன்பாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகிலன் உள்ளிட்டோர் ஆஜராகினர். விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.