Friday, May 24, 2024
Home » ஜன.10ல் இஎஸ்ஐ குறைதீர்க்கும் முகாம்

ஜன.10ல் இஎஸ்ஐ குறைதீர்க்கும் முகாம்

by Karthik Yash

நெல்லை, ஜன.6: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐ) திருநெல்வேலி துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 10ம் தேதி (புதன்) மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் இஎஸ்ஐசி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இஎஸ்ஐ திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். எனவே பயனீட்டாளர்கள், குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும் படி குறைதீர்க்கும் அதிகாரியான துணை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi