சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவும் பஞ்சம், கடந்த ஆண்டு மட்டுமே பஞ்சத்தால் 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க தீபகற்பத்தில் வறட்சியால் அறிவிக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இதுவாகும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்தது 18,000 பேர் மற்றும் 34,000 பேர் இறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், வறட்சியால் உணவு பற்றாக்குறை, காலரா போன்ற நோய்களுடன் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டு இறப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பல்லாயிர கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன. அரை மில்லியன் குழந்தைகள் இந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.