லக்னோ: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் தமிழ்நாடு முதல் வெற்றியை பதிவு செய்தது. எலைட் இ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, முதல் லீக் ஆட்டத்தில் சட்டீஸ்கரிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது 2வது ஆட்டத்தில் நேற்று ஒடிஷா அணியுடன் மோதியது. டாஸ் வென்று பேட் செய்த ஒடிஷா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன் குவித்தது. அன்ஷி ராத் 51, சேனாபதி 65 ரன் விளாசினர். தமிழ்நாடு தரப்பில் நடராஜன் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நாராயண் ஜெகதீசன் 35, ஷாருக்கான் 19, சாய் சுதர்சன் 14 ரன் எடுத்தனர். கேப்டன் பாபா அபராஜித் 63 ரன் (42 பந்து, 7 பவுண்டரி), வாஷிங்டன் 7 ரன்னுடன் ஆட்டமிழக்கமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. எனினும், காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது….