ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தஞ்சை இயற்கை மீன் வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் முப்பெரும் விழா சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட நபார்டு வளர்ச்சி மேலாளர் அனீஸ்குமார் தலைமை தாங்கினார். ஆர்டி பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் விஜயகுமார் வரவேற்புரை ஏற்றினார். முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சங்கரநாராயணன் கலந்து கொண்டு மீன் வளர்ப்பு தீவனங்கள் மீன் குஞ்சு விற்பனை மையம், உயிர் மீன் விற்பனை மையம் மற்றும் நடமாடு மீன் விற்பனை வாகனங்களை துவக்கி வைத்தும் விவசாயிகளுக்கு கனரக வங்கி மூலம் கடன்களை வழங்கி நபார்டு வங்கி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் விளக்கி பேசினார்.
சைபர் கிரைம் போலீசார் வழங்கினர் பெற்றோர்களுடன் இணைந்து மாணவிகள் போராட்டம் ஒரத்தநாட்டில் நடமாடும் மீன் விற்பனை வாகனம் நபார்டு வங்கி அதிகாரி தொடங்கி வைத்தார்
previous post