பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்தவர் சையத் முஷ்ரப் (25). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சவாரிக்காக நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர், சையத் முஷரப்பிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்ததால் முஷரப்பின் முகத்தில் கிழித்து விட்டு தப்பிவிட்டனர். முஷ்ரப்பை அப்பகுதியினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சையது முஷ்ரப் கொடுத்த புகாரின்படி, எம்கேபி. நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குபதிவு செய்து விசாரித்தார். அதில், வியாசர்பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த மதன் மத்தியாஸ் (21) என்பவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து செல்போன் பறித்தது தெரிந்தது. இதையடுத்து, மதன் மத்தியாசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர். …
செல்போன் பறித்த வாலிபர் கைது
previous post