சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் எலக்ட்ரானிக் பிளான்ட் தொடங்கி வைக்க உள்ளேன். தமிழகம், கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்கள் எலக்ட்ரானிக் தொழில்களில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்தியாவிலேயே தற்போது 97 சதவீத செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. செல்போன்கள் தயாரிப்பில், உலகத்தில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….