தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி வெண்ணாம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கோகுல் (18), இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படிக்கும் நண்பரான அன்னசாகரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் அகரமுதல்வன் என்பவரும், நேற்று முன்தினம் இரவு, சேலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ரிங் ரோடு மேம்பாலத்தில், செல்பி எடுப்பதற்காக டூவீலரில் சென்றனர். ரிங் ரோட்டில் சென்ற போது, அவ்வழியாக வந்த பஸ், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் கோகுல் உயிரிழந்தார். தொடர்ந்து அகரமுதல்வனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவன் பஸ் மோதி பலி
previous post