சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேப்பேரி உதவி கமிஷனருக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. கடந்த 2017ம் ஆண்டு கூடங்குளம் பெருமணலைச் சேர்ந்த செல்விஸ்டன் என்பவரை அவதூறாகப் பேசி கொலை முயற்சி செய்ததாக செட்டிகுளத்தைச் சேர்ந்த மீன்ராஜா என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. விசாரணையின்போது ராஜபால் என்பவர் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு சார்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் பர்சத் பேகம் பிடிவாரண்ட் பிறப்பித்தார். ராஜபால் தற்போது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் உதவி கமிஷனராக உள்ளார். …