சென்னை: தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வந்தாலும் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. காலை நேரங்களிலும், இரவிலும் கடும் குளிர் காணப்படுகிறது. இந்நிலையில், அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுதவிர விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக, 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். தென் வங்கக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகம் மூலம் 60 கிமீ வேகம் வரை வீசும். மன்னார் வளைகுடா முதல் ஆந்திர கடலோரப் பகுதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்….
சென்னை வானிலை மையம் அறிவிப்பு தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்யும்
previous post