Thursday, May 9, 2024
Home » சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோகைன் விற்பனை செய்த மேலும் 4 பேர் சிக்கினர்: நடிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதா தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோகைன் விற்பனை செய்த மேலும் 4 பேர் சிக்கினர்: நடிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதா தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

by Karthik Yash

அண்ணாநகர், ஜன.24: அமைந்தகரை பகுதியில் கோகைன் விற்ற நைஜீரிய நாட்டை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை, கடந்த 20ம் தேதி கைது செய்த அமைந்தகரை போலீசார், ₹5 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 120 கிராம் கோகைன், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் தரம்பரம் முடிச்சூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பெங்களூரூ, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கிவந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின் பேரில், போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக அண்ணாநகரில் அனிருத் சவுத்ரி (34), என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த லால்சாம் (31), ரித்தேஷ் பரிகார் (34), வியாசர்பாடியை சேர்ந்த அங்கூர் சேடா (32) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 33 கிராம் கோகைன் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சென்னையை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் நைஜீரிய கும்பலிடம் இருந்து போதை பொருட்களை வாங்கிவந்து சென்னை சுற்று வட்டார பகுதிகளில் வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, கூகுள் பே மூலம் பணம் பெற்று விற்பனை செய்துள்ளனர். இதுசம்பந்தமாக சிறையில் உள்ள நைஜீரிய நாட்டை சேர்ந்த சின்டு ஓனர்ச்சியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போது பல உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. போதை பொருட்கள் விற்பனை கும்பலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பிடிபட்ட நைஜீரியர்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், நடிகர், நடிகைகளுக்கும் போதைப் பொருள் விற்பனை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.

You may also like

Leave a Comment

seventeen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi