சென்னை: சென்னை செங்குன்றம் அருகே நகை பட்டறை உரிமையாளர் அச்சுதனை கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில் போட்டியால் கொளத்தூர் நகை பட்டறை உரிமையாளர் ஜெயபாபு கூலிப்படை வைத்து கொல்ல முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கூலிப்படையைச் சேர்ந்த அப்பு, விமல்ராஜ், வசந்த், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படைக்கு ரூ.21 லட்சம் பணம் கொடுத்து அச்சுதனை கொலை செய்ய முயன்றது அம்பலாகி உள்ளது….