சென்னை :44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான 28 ம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. …