சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நல்லகண்ணு, முத்தரசன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் இரா.முத்தரசன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு, தோழர் ஜீவாவுக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ அறிவித்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர். சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா.முத்தரசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தார்….