Friday, May 17, 2024
Home » சென்னையில் ரவுடி மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் போலீசாரை கார் ஏற்றி கொல்ல முயன்ற ரவுடி கும்பல் மீது துப்பாக்கி சூடு

சென்னையில் ரவுடி மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் போலீசாரை கார் ஏற்றி கொல்ல முயன்ற ரவுடி கும்பல் மீது துப்பாக்கி சூடு

by kannappan

* காரை ஏற்றியதில் எஸ்ஐ, காவலர் படுகாயம் * காட்பாடியில் சினிமா பாணியில் பரபரப்புவேலூர் : சென்னையில் ரவுடி மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை தொடர்ந்து காட்பாடி வந்த ரவுடி கும்பலை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றனர். உடனே துப்பாக்கியால் சுட்டு கும்பலை மடக்கினர். காரை ஏற்றியதில் எஸ்ஐ, ஒரு காவலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் தேடப்படும் குற்றவாளி கும்பல் வேலூருக்கு காரில் வருவதாக வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணனுக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி- குடியாத்தம் சாலையில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தியபோது, காரை நிறுத்தாமல் அந்த கும்பல் போலீசார் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சித்தது. அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் விலகி தப்பினர்.ஆனாலும் இதில் ஒரு எஸ்ஐ, ஒரு காவலர் படுகாயமடைந்தனர். ஆனாலும் சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனே அந்த கும்பலை வாகனங்களில் சினிமா பாணியில் துரத்திச்சென்றனர். அந்த கார் காட்பாடி அடுத்த எல்.ஜி. புதூர் அருகே சென்றபோது, போலீசார் காரின் டயரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் டயர் வெடித்து, கார் சாலையோரம் நின்றது. அப்போது காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரவுடி ஒருவன் தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து காரில் இருந்த மேலும் 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் பேரணாம்பட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பேரணாம்பட்டு அடுத்து ஏரிக்குத்தி பகுதியைச் சேர்ந்த இம்ரான்(35) என்பதும், மற்றவர்கள் சென்னையைச் சேர்ந்த மாதவன், மணிபாலன், பாஷா, அசோக்குமார் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.மேலும், சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியின் மனைவியுடன் வாலிபர் ஒருவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் ரவுடியின் மனைவியை கள்ளக்காதலன் அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகும்பல் கள்ளக்காதலில் தொடர்புடைய வாலிபரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுதொடர்பாக மிரட்டல் விடுத்தவர்களை சென்னை போலீசார், தேடிவந்துள்ளனர். இதற்கிடையே தான் இந்த கும்பல் வேலூருக்கு தப்பி வருவது தெரியவந்தது. இதற்கிடையில் காட்பாடியில் வாகன சோதனையில் காரை நிறுத்தாமல், போலீசாரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதில் படுகாயமடைந்த எஸ்ஐ மற்றும் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் கேட்டபோது, ‘சென்னையில் இருந்து பழைய குற்றவாளிகள் வேலூருக்கு தப்பி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காட்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு கும்பல், காரை நிறுத்தாமல் போலீசார் மீது காரை ஏற்றிவிட்டு தப்பியோடியது. இதில் 2 போலீசாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கும்பல் இன்னும் சிக்கவில்லை. 12 மணிநேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், விசாரணையில் இவர்கள் பயங்கரமான குற்றவாளிகள் என்று தெரியவந்துள்ளது’ என்றார்….

You may also like

Leave a Comment

nine + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi