Monday, June 17, 2024
Home » சென்னையில் அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னையில் அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

by kannappan

சென்னை: சென்னையில் அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தையும், மிகவும் பழைய குடியிருப்பு கட்டங்களையும், புதியதாக குடியிருப்பு கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தினையும், சுற்றியுள்ள சாலைகளையும், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும்  உட்கட்டமைப்பு போன்றவற்றை, இன்று நேரடியாக சென்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; . சென்னை, தாடண்டர் நகர், சைதாப்பேட்டை தொகுதியின் ஒரு பகுதி. இதில்தான், தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு அரசின் சார்பாக கட்டி கொடுக்கின்ற குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள், அரசு ஒதுக்கீட்டில் குடியிருக்கிறார்கள். ஏ-வகை குடியிருப்புகள் 100, பி-வகை குடியிருப்புகள் 136, சி-வகை குடியிருப்புகள் 812 உள்ளன. பொதுப்பணித்துறையை சார்ந்த பொறியாளர்களுக்கான 41 குடியிருப்புகள் உள்ளன. தாடண்டர் நகர் வளாகத்தில், 72 பழைய குடியிருப்புகள் இருக்கின்றன. அவற்றை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். பராமரிப்புப் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகள் எல்லாம் சரிவர நடைபெறுகிறதா என்பதையும், அனைத்து கட்டடங்களையும் இணைத்திடும் வகையில் உட்புறச்சாலை அமைக்க, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த பணிகள் எல்லாம் நடைபெறுகிறதா என்பதையும், அமைச்சர் ஆய்வு செய்தார்கள். புதியதாக, 190 பி-வகை குடியிருப்புகள், ரூ.88.49 கோடி மதிப்பீட்டில், கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடம் தரமாக கட்டப்படுகிறதா, மணல் பரிசோதனை செய்தார்களா, கம்பிகள் தரமானதாக உள்ளதா, தண்ணீரை பரிசோதித்தார்களா, என்பதையெல்லாம் ஆய்வு செய்ய, ஆய்வகம் உள்ளதா என்பதை அமைச்சர் ஆய்வு செய்தார்கள். இந்த குடியிருப்பு, 19 பல்லடுக்கு குடியிருப்பு கட்டடம் ஆகும். இதில், 10 அடுக்குக் குடியிருப்புகள் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 9 அடுக்குக் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டியுள்ளதால், அவற்றை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்கள். மேலும், புதியதாக 190 சி-வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு, 1.11.2022 அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. விரைவாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அந்த 190 “சி“வகை குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்கள். அரசு குடியிருப்புகளில் வசிக்கும், அரசு அலுவலர்களில் சிலர் கட்டடங்களில் பெயிண்ட் அடிக்க வேண்டும், சாலைகள் விரிவுப்படுத்த வேண்டும் என்றும், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அமைச்சரிடம் கோரினார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவித்தார்கள். இந்த ஆய்வின்போது, மகேஷ்குமார், துணை மேயர், சென்னை மாநகராட்சி, இரா.விஸ்வநாத், முதன்மைத் தலைமைப் பொறியாளர், பொதுப்பணித்துறை, திரு.ஆயிரத்தரசு ராஜசேகரன், தலைமைப் பொறியாளர், சென்னை மண்டலம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்….

You may also like

Leave a Comment

fourteen + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi