பாடாலூர், மார்ச் 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 16ம் தேதி துவங்கியது. இந்நிலையில் நேற்று ஏகாம்பரேஸ்வரர் பஞ்சப்பிரகார விழா மிக விமர்சையாக நடந்தது. ஏகாம்பரேஸ்வரர், பிரியாவிடை அம்மன், காமாட்சியம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சுவாமிகள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் பஞ்சப்பிரகார வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பஞ்சப்பிரகார விழா
previous post