திருச்சி, பிப்.7: திருச்சி உறையூர் காவல்காரன் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (72). செங்கல் சூளை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த வாசுதேவன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த உறையூர் வாசுதேவனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இறந்து போன வாசுதேவனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.