Friday, May 17, 2024
Home » செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த முடிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த முடிவு

by Karthik Yash

திருப்போரூர், ஜன.11: செங்கல்பட்டு மாவட்டத்தில், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தின்படி, 16 ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நகர வளர்ச்சி, வருவாய், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக ஊராட்சியாக உள்ளவற்றை பேரூராட்சியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பேரூராட்சியாக தரம் உயர்த்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தந்த ஊராட்சிகளின் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி தருமாறு மாவட்ட கலெக்டர், செங்கல்பட்டு ஊராட்சிகளின் உதவி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஊராட்சிகளை தரம் உயர்த்துவதோடு மாமல்லபுரம் பேரூராட்சியும் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதுமட்டுமின்றி தரம் உயர்த்தப்படும்போது அந்த ஊராட்சியை ஒட்டியுள்ள மற்ற ஊராட்சிகளும் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கேளம்பாக்கம் மற்றும் தையூர் இரண்டு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு ஒரே பேரூராட்சியாகவும், முட்டுக்காடு பேரூராட்சியுடன் படூர் ஊராட்சியும் இணைக்கப்பட உள்ளது. தாழம்பூர் பேரூராட்சியுடன் சிறுசேரி, காரணை கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன. புதுப்பாக்கம் பேரூராட்சியுடன் பொன்மார், சோனலூர் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் தண்டலம் ஊராட்சி திருப்போரூர் பேரூராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பேரில், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள ஊராட்சிகளின் பட்டியல் பின்வருமாறு: ஏற்கனவே உள்ள பேரூராட்சிகளுடன் இணைக்க வாய்ப்பு உள்ள ஊராட்சிகளின் பட்டியலும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊராட்சி
ஒன்றியத்தின் பெயர் பேரூராட்சியாக தரம்
உயர்த்தப்பட உள்ள
ஊராட்சிகள்
திருப்போரூர் கோவளம்
திருப்போரூர் முட்டுக்காடு
திருப்போரூர் நாவலூர்
திருப்போரூர் புதுப்பாக்கம்
திருப்போரூர் தாழம்பூர்
திருப்போரூர் கேளம்பாக்கம்
திருக்கழுக்குன்றம் புதுப்பட்டினம்
திருக்கழுக்குன்றம் சதுரங்கப்பட்டினம்
காட்டாங்குளத்தூர் வண்டலூர்
காட்டாங்குளத்தூர் நெடுங்குன்றம்
காட்டாங்குளத்தூர் ஊரப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் வல்லம்
காட்டாங்குளத்தூர் சிங்கபெருமாள் கோயில்
காட்டாங்குளத்தூர் ஆலப்பாக்கம்
லத்தூர் செய்யூர்
சித்தாமூர் சூனாம்பேடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

You may also like

Leave a Comment

seven − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi