தர்மபுரி, ஏப்.4: தர்மபுரி மதிகோண்பாளையம் போலீஸ் எஸ்ஐ மாரப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது மூக்கனூர் பகுதியில் சூதாட்டம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு சூதாடிக்கொண்டிருந்த 5பேர் கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(44), அசோக்(41), ஆனந்த வெங்கடேஷ், முருகன், விமல்ராஜ் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 5 டூவீலர்கள் மற்றும் ₹1050 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாடிய 5 பேர் கைது
previous post