தர்மபுரி, மே 11: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணிக்கம்புதூர் கிராமத்தில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டிச்சென்று சின்னசாமி(36), மணிகண்டன் (34), ஜெகநாதன்(25), நந்தகோபால் (32) ஆகியோரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹550 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பாலக்கோடு எஸ்ஐ கோகுல் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ரெட்டியூரில் வீட்டின் அருகில் கஞ்சா பதுக்கி விற்ற தர்மன்(30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாடிய 4பேர் கைது
previous post