புதுடெல்லி: நேற்று முன்தினம் புதிதாக 43 அமைச்சர்களுடன் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்ற நிலையில், ஒன்றிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர், ஒன்றிய சுகாதாரத் துறையின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள மனுசுக் மாண்டவியா அளித்த பேட்டியில், ‘‘கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ற வகையில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த, ரூ.23 ஆயிரத்து 123 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையிலான ஒன்பது மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். ஏற்கனவே, கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பதற்காக ஒன்றிய அரசு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது,’’ என்றார்….