சீர்காழி, ஏப். 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் 30 மாணவர்களுக்கு சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் கலந்துரையாடினர்.
அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்களை அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தனித்திறமைகளை வெளி கொண்டு வந்து அவர்கள் வாழ்வில் முன்னேற நமது பங்களிப்பு இருக்க வேண்டுமென ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உளவியல் நிபுணர் ரம்யா அறிவுரை வழங்கினார்.