பெரம்பலூர்,ஆக.3: பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறைசார்பாக அதன் டெக்ஓசியன் சங்கதுவக்கவிழா மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற தலைப்பில் சிறப்புறை கல்லூரி கலையரங்கில் 1ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கனிணி அறிவியல் துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர்கோவிந்தராஜ் பங்கேற்றார். துறைத்தலைவர் பேராசிரியர் ராஜகுமார் வரவேற்றார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் வாழ்த்தி பேசினார்.மற்றும் புல முதன்மையர் பேராசிரியர் சந்திரசௌத்திரி பங்கேற்றார்.
உதவிபேராசிரியர் கு.அர்ச்சனா சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்தினார். சிறப்பு விருந்தினர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கனிணிபயன்பாட்டியியல் துறை டெக்ஓசியன் சங்கத்தின் தலைவராக கல்ஃபான், முதுகலை இரண்டாம் ஆண்டு கனிணி பயன்பாட்டியியல் துறைமாணவர் பிரியா, முதுகலை இரண்டாம் ஆண்டு கணிணி பயன்பாட்டியியல் துறைமாணவி துணைத்தலைவராகவும், கார்திகா, இளங்கலை மூன்றாம் ஆண்டு கனிணிபயன்பாட்டியியல் துறைமாணவி செயலாளராகவும் சூரியா, இளங்கலை மூன்றாம் ஆண்டு கனிணிபயன்பாட்டியியல் துறைமாணவர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். விழாவின் நிறைவாக உதவிபேராசிரியர். அருந்ததி நன்றி கூறினார்.விழாவில் இத்துறையைசார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைபேராசிரியர்களும், மாணவர்களும் செய்தனர்.