Friday, May 10, 2024
Home » சீனாவில் மாயமான ‘அலிபாபா’ நிறுவனர் ஜேக் மா ஜப்பானில் தஞ்சம்

சீனாவில் மாயமான ‘அலிபாபா’ நிறுவனர் ஜேக் மா ஜப்பானில் தஞ்சம்

by kannappan

பீஜிங்: சமீப காலமாக தலைமறைவாக இருந்த சீன தொழிலதிபர் ஜேக் மா கடந்த 6 மாதமாக ஜப்பானில் வசிப்பது தெரிய வந்துள்ளது. சீன கோடீஸ்வரரான ஜேக் மா, ஆன்ட், அலிபாபா என்ற ஆன்லைன்   நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் சீனாவில் அரசு நடத்தும் வங்கிகள் அடகு கடைகள் போல் செயல்படுவதாக கடந்த 2020ம் ஆண்டு குற்றம் சாட்டினார். அரசு வங்கிகளை விமர்சித்ததை தொடரந்து அவரது நிறுவனங்களில் சீன அரசு அதிரடி சோதனை நடத்தியது. இதில் ஆன்ட் நிறுவனத்தின் ரூ.3.02 லட்சம் கோடி, அலிபாபா நிறுவனத்தின் ரூ.16,980 கோடி மதிப்பு சொத்துக்கள் கடந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2020 நவம்பரில் ஜேக் மா மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்ைல. அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுச் சிறையில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஜேக் மா தனது குடும்பத்தினருடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன் ஜப்பானில் தஞ்சம் அடைந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கடந்தாண்டு முதல் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா, இஸ்‌ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற தகவலும் வெளியாகியுள்ளது. …

You may also like

Leave a Comment

five + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi