சிவகாசி, ஏப்.6: சிவகாசியில் புதிய டிஎஸ்பியாக சுப்பையா பொறுப்பேற்றுக் கொண்டார் . சிவகாசி டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த தனஞ்ஜெயன் பழநிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பழநியில் பணிபுரிந்து வந்த சுப்பையா சிவகாசி புதிய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். புதிய டிஎஸ்பி சுப்பையா ரிசர்வ்லையனில் உள்ள டி.எஸ்.பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, சிவகாசி சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், போலீசார், புதிய டி.எஸ்.பி சுப்பையாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
previous post