சிவகாசி, ஜூன் 26: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்சிக்கு முதல்வர் அசோக் தலைமை வகித்தார். இதில், விருதுநகர் மாவட்ட இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அலுவலர் குமாரமணிமாறன் சிறப்புரையாற்றினார். முன்னதாக உடற்கல்வித்துறை (சுயநிதிப் பிரிவு) தலைவர் ஜான்சன் வரவேற்றார். உடற்கல்வித்துறை பேராசிரியர் சுரேஷ்பாபு வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.