Friday, May 10, 2024
Home » சிவகங்கை அரசு கல்லூரியில் இளைஞர் இலக்கிய திருவிழா

சிவகங்கை அரசு கல்லூரியில் இளைஞர் இலக்கிய திருவிழா

by Ranjith

சிவகங்கை, பிப்.16: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறை, பொது நூலகத்துறை, மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா நடைபெற்றது. கல்லூரி நூலகர் வாஞ்சிநாதன் வரவேற்றார். அழகுச்சாமி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல், வரலாற்றுத் தலைவர் கலைச்செல்வி வாழ்த்தி பேசினர்.

மாணவ,மாணவியருக்கு இரண்டு நிமிட பேச்சு, நூல் அறிமுகம், இலக்கிய விநாடி வினா, ஹைக்கூ, ஓவியம், விவாத மேடை, பேச்சு, படத்தொகுப்பு உருவாக்கம், ஆங்கில புத்தக விமர்சனம், உடனடி பொறியியல் எனும் 10தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் 147 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இணைப்பேராசிரியர்கள் ராமமூர்த்தி, கேத்தராஜ், கிளை நூலகர்கள் சூரசங்கரன், ஜேசுராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi