சிவகங்கை, பிப். 28: சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பியாக மதுரை எஸ்பியாக உள்ள டோங்ரே பிரவீன் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக கடந்த ஆகஸ்ட் முதல் அரவிந்த் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று சிவகங்கை எஸ்பியாக பணியாற்றி வரும் அரவிந்த் மதுரை எஸ்பியாகவும், மதுரை எஸ்பியாக பணிபுரிந்து வரும் டோங்ரே பிரவீன் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.