Saturday, June 1, 2024
Home » சிறுவனுக்கு தொடர் பாலியல் தொந்தரவு இளம்பெண்ணுக்கு போலீஸ் எச்சரிக்கை

சிறுவனுக்கு தொடர் பாலியல் தொந்தரவு இளம்பெண்ணுக்கு போலீஸ் எச்சரிக்கை

by kannappan

புழல்: செங்குன்றம் அடுத்த  தீர்த்தங்கரையம்பட்டு கிராமம் இருசப்பன் தெருவை சேர்ந்த 17  வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில்  ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறான். இவனது  பக்கத்து வீட்டில் 25 வயதுடைய பெண் தனது கணவருடன் வசிக்கிறார். இந்நிலையில், இளம் பெண், சிறுவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்துபோன சிறுவன், இதுகுறித்து தனது  பெற்றோரிடம் கூறினான். புகாரின்பேரில் மாதவரம் மகளிர்  போலீசார் விசாரித்தனர். அதில், சிறுவனிடம் இளம்பெண் தகாத  முறையில் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கடுமையாக  எச்சரித்து அனுப்பினர். மற்றொரு சம்பவம்:கும்மிடிப்பூண்டி அடுத்த கோபால்ரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் தசரதன் (எ) வெங்கடேசன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். புகாரின்பேரில் சிப்காட் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

three − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi