ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாய்மாமனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வசித்து வருபவர் வட மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு தொடர்ந்து வயிறு வலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது, மருத்துவர்களின் பரிசோதனையில் அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர், சிறுமியின் தாய், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் சிறுமி அளித்த தகவலின்படி விசாரணை செய்து வந்தநிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுமியின் தாய் மாமனான சுனில் ஜா (32) என்பவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஆறு மாதம் கர்ப்பமாக்கி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், சுனில் ஜா மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்….