Thursday, May 16, 2024
Home » சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு

by Ranjith

 

திண்டுக்கல், டிச. 19: பழநி பகுதியை சேர்ந்தவர் காந்தி ராஜன் (23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில் பழநி அடிவாரம் போலீசார் காந்திராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் காந்திராஜனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi