அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (50), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்துரு (எ) சந்திரன் (21). ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும், சிறுமிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சந்துரு காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். போலீசார் நேற்று முன்தினம் சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சென்னை போரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வருவதும், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சந்திரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்தனர். பின்னர், அவரை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்….