கோவை, ஜூன் 18: கோவை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் காளப்பட்டி நேரு நகரில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் கொய்யா, புளி, மாதுளை உள்ளிட்ட பல்வேறு இன மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் சிஐஎஸ்எப் கமான்டன்ட் தினேஷ் டாகிவத்கர் உட்பட பலர் கலந்து ெகாண்டனர். சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்க, பசுமை ேதாற்றம் ஏற்படுத்த மத்திய ெதாழில் பாதுகாப்பு படையினர் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடவு செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.விமான நிலைய வட்டார பகுதிகளில் பசுமை தோற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகளின் உதவியுடன் பசுமை தோற்றம் உருவாக்கும் பணிகள் நடக்கிறது.