ஈரோடு, மார்ச் 15: ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் அன்பு ஜனாதிபதி தலைமை தாங்கினார்.
இதில், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமை சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெற வலியுறுத்தியும், சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாநில பொருளாளர் பாரதி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.