ஈரோடு, ஏப்.23: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 20ம் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மயங்கிய நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், இறந்த நபர் யார் ?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் மயங்கி கிடந்தவர் பலி
previous post