கோவை : கோவை மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் ஊழியர்கள் நேற்று கோவை உக்கடம், புல்லுக்காடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 2 கன்றுக்குட்டிகள் உள்பட 7 மாடுகளை பிடித்து கோவை வ.உ.சி. பூங்காவில் அடைத்தனர். இது குறித்து டாக்டர் செந்தில்நாதன் கூறியதாவது: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. இதன்அடிப்படையில் சாலைகளில் சுற்றித்திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு உள்ளன. மாடுகளின் வயதை பொறுத்து ரூ. ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால், அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….
சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் பிடிபட்டன-வ.உ.சி. பூங்காவில் அடைப்பு
previous post