கோவை : கோவை கோட்டைமேடு பி.கே வீதியில் கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகள் சாலையில் அங்கங்கே கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தற்போது, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் குறைந்து வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் யாரோ கொரோனா பரிசோதனை உபகரணங்களை கொட்டி சென்றுள்ளனர். இந்த உபகரணங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் உபயோகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது போன்ற அஜாக்கிரதை நடவடிகைகளால் மீண்டும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கொரோனா பரிசோதனைகளின் ரத்த மாதிரிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்களை இங்கு கொட்டியது யாரென்று விசாரணை செய்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்….
சாலையில் கிடந்த கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகள்: பொதுமக்கள் அதிர்ச்சி
previous post