ராஜபாளையம் : ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரம் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் பாதாளச்சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன், கழிவு நீரும் கலப்பதால் இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது.எனவே, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வாறுகாலை சீரமைத்து அதில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
சாலையில் ஓடும் கழிவுநீர் ராஜபாளையத்தில் நோய் தொற்று அபாயம்
previous post