சாத்தான்குளம், மார்ச் 15: சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றிய அரசின் போசுவான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு, பராமரிப்பு குறித்து மருத்துவ அலுவலர் பிருந்தா மகேஸ்வரி விளக்கி பேசினார். தொடர்ந்து ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். இதில் ஆழ்வார்திருநகரி வட்டாரத்துக்குட்பட்ட 23க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்று கண்காட்சி குறித்து விளக்கம் அளித்தனர். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஆஷா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சாலைப்புதூரில் விழிப்புணர்வு முகாம்
previous post