ஏரல், அக். 26: சாயர்புரம் அருகே செந்தியம்பலத்தில் ஹீரோஸ் மற்றும் ஜீரோஸ் ஊர் இளைஞர்கள் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. சேர்வைகாரன்மடம் பஞ். முன்னாள் தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாதா நகர் அணிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசினை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், சேர்வைகாரன்மடம் பஞ். துணை தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஜெபஸ்டின் ஆகியோர் வழங்கினர்.
இரண்டாமிடம் பெற்ற செந்தியம்பலம் அணிக்கு தூத்துக்குடி கருப்பசாமி உமா ஜூவல்லரி சார்பில் நாராயணன் பரிசு கோப்பை வழங்கினார். 3வது இடம் பெற்ற புதுக்கோட்டை அணிக்கு சேர்வைகாரன்மடம் பஞ். தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் சார்பில் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.4வது இடம் பெற்ற முள்ளன்விளை, 5வது இடம் பெற்ற சவேரியார்புரம் அணிகளுக்கும் பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசினை தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை தலைவர் பாலமுருகன் சார்பில் வழங்கப்பட்டது. தொடர் ஆட்டநாயகன் விருது தூத்துக்குடி மாதா நகர் அணி வீரர் பிரதீப்புக்கு தூத்துக்குடி எஸ்டிஆர் தர்மராஜ் நாடார் நினைவாக அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜான், ஜெபர்சன், வினோத், நவீன், அசன், ஜெபதாஸ் மற்றும் செந்தியம்பலம் ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.